ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மருத மடு திருத்தல ஆவணித் திருவிழா



இன்று இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மருத மடு திருத்தலத்தின் விழாவை மிக மிக விமரிசையாக கொண்டாடினார்கள். ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த இலங்கை கத்தோலிக்க விசுவாசம் ஆரம்பத்தில் வேருன்றிய காலத்தில் மாந்தை பகுதியில் ஆரம்பித்த இவ் மரியாளின் வணக்கம் மருத மடுவில் வேதகலாபனை காரணமாய் நிலைபெற்று இன்று இலங்கை வாழ் மக்கள் யாவருக்கும் இன, மத பேதம் இன்றி பரந்துள்ளதுள்ளது.
இவ் திருத்தல ஆயத்த வழிபாடுகள் கடந்த நாட்களில் நடைபெற்று நேற்று இரவு நற்கருணை வழிபாடு நடைபெற்று, இன்று காலை கொழும்பு பேராயர் பேரருள்திரு மல்கம் ரஞ்சித் தலைமையில் யாழ்ப்பாண, மன்னார், அனுராதபுர, பதுளை ஆயர்களின் கூட்டினைவில் பெருமளவு குருக்கள், லட்சகணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

தமிழ், சிங்கள மொழிகளில் திருப்பலி நடை பெற்றது முக்கிய ஆசிர்கள் லத்தின் மொழியில் வழங்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எராளமான தமிழ், சிங்கள கத்தோலிக்க, இந்து, பெளத்த மக்கள் இவ் வழிபாடுகளில் பங்குபற்றினர்.

மருத மடு மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம்

மன்னார் மறை மாவட்டத்தின் மிகப்பெரிய ஆலயமாகிய பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயம் சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. பெருமளவு இறை மக்களையும் குருக்களையும் கொண்ட இந்த கடலோர ஆலயம் மன்னார் மறை மாவட்டத்தின் சாட்சிய வாழ்வுக்கான ஒரு மாபெரும் அடையாளம்.அருட்பணி. வின்சென்ட் பற்றிக் இன் காலத்தில் கட்டி இலங்கைக்கான வாடிகன் இன் பிரதிநிதியால் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த ஆலயம் தற்போது அருட்பணி.அகஸ்டின் இனால் நிர்வகிக்கப்படுகிறது.
பெருமளவு யாத்ரிகர்கள் இந்த ஆலயத்தை தினமும் தரிசித்து வருகிறார்கள். பயணப் பாதை- மன்னாரில் இருந்து பேசாலை பஸ் மூலமாயோ அல்லது தலை மன்னார் பஸ்மூலமாயோ செல்லலாம்.
இவ் இடுகை இன் ஆசிரியர் புனித வெற்றி நாயகி இன் வேண்டுதலால் நன்மை பெற்று அளிக்கும் சாட்சியம் இது. நன்றி.
புனித வெற்றி நாயகித் தாய் வெற்றி தருவாள்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அன்பு வாசகர்களுக்கு

இனி உங்கள் குடில் முழுவதும் தமிழில் வெளிவரும். உங்கள் அனைவரின் பங்களிப்பும் மிக மிக அவசியம் உங்கள் ஆக்கங்களும் சேர்க்கப்பட இருக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் அன்பை தொடரவும். நன்றி

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

PERIAKATTU FESTIVAL



Today one of the Mannar Diocese's Shrine periyakattu St.Antony's church festival. It's grantly organised, many devotees took part in today's Holy Mass. Vicar General of mannar diocese Rev Fr.Victar Soosai and 7 priests took part in Holy Mass, including Secretary of Mannar Bishop. Events are organised by Cheddikulam Parish Priest Rev Fr.Arulpragasam OMI. This Shrine lying on Mannar - Medawadchiya high way, near to Parayanayankulam junction.This is a century old shrine, most of cheddikulam, mannar tamil catholic people attend in festival annually.
ST.ANTONY PRAY FOR US